யேர்மன் ஜெனரல் நேட்டோவின் கூட்டுப் படைக் கட்டளையின் புதிய தளபதியாகிறார்!
இன்று புதன்கிழமை முதல், யேர்மன் விமானப்படை ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் நேட்டோவின் கிழக்குப் பகுதியின் செயல்பாட்டுப் பாதுகாப்பை பொறுப்பேற்று மேற்பார்வையிடுவார்.
59 வயதான இவர், நெதர்லாந்தின் பிரன்சுமில் உள்ள நேட்டோ தலைமையகமான நேச நாட்டு கூட்டுப் படை கட்டளையின் கட்டளைப் பொறுப்பை இத்தாலிய ஜெனரல் குக்லீல்மோ லூய்கி மிக்லியெட்டாவிடமிருந்து இன்று புதன்கிழமை நண்பகலில் பொறுப்பேற்பார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து , கூட்டணிப் பகுதியின் கிழக்குப் பகுதியைத் தடுப்பதும் பாதுகாப்பதும் மீண்டும் ஒருமுறை நேட்டோ நாடுகளுக்கு ஒரு முக்கியப் பணியாக மாறியுள்ளது.
சமீபத்தில், ரஷ்யா நேட்டோவின் பரஸ்பர பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டை சோதிக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகள் மிகவும் வலுவாகிவிட்டன.
நேட்டோ நாடுகளின் தலைமையகங்கள் மூன்று உள்னன. அதில் ஒன்று நெதர்லாந்தில் பிரன்ஸமில் அமைந்துள்ளது. ஏனைய இரண்டும் அமெரிக்காவின் நேபிள்ஸ் மற்றும் வர்ஜீனியாவின் நோர்போக்கில் உள்ளன. மேலும் அவை அமெரிக்கர்களால் வழிநடத்தப்படுகின்றன.
கெர்ஹார்ட்ஸ் தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.
Post a Comment